நான் எழுதிய கடிதங்கள்...

     பொதுவாக அடிக்கடி கடிதம் எழுதும் பழக்கம் எனக்கு இல்லை. ஆனால் சில நல்ல கடிதங்களை நான் எழுதியுள்ளேன். வாழ்க்கையில் நான் பார்க்கும் விசயங்கள் சிலசமயம் நம் எண்ண ஓட்டத்தை மாற்றி அமைக்கப்படக்கூடிய வல்லமை படைத்தவை அப்படியான தருணங்களை என் நன்பர்களுடன் கடிதத்தின் வாயிலாக பகிர்ந்துள்ளேன். கடிதம் எழுதுவதில் உள்ள சவுகரியம் நாம் என்ன நினைக்கின்றோம் என்பதை நிதானமாக யோசித்து தகுந்த வார்த்தைகளைக் கொண்டு சொல்லிவிட முடியும். போசும் போது இது கடினம். சிலசமயம்  தப்பான வார்த்தைகள் பிரயோகம் ஆவதையும், சொல்லவந்த விசயம் மறந்து போவதையும் நம்மால் தடுக்கமுடியாது.

    நேற்று எனது மின்னஞ்சலை துளாவியபோது (மின்னஞ்சலும் கடிதம் தானே!) எப்போதோ எழுதிய சில மின்னஞ்சல்களை படிக்க நேர்ந்தது. ஒரளவிற்கு சுவாரசியம் என்னளவில் ஏற்படுத்திய அக்கடிதங்களை இங்கே தொடர் பதிவுகளாக பதிய ஆசைப்படுகிறேன். இதை ஏன் நான் செய்கிறேன் என்றால் சில நேரங்களில் மனதிலிருப்பதை வார்த்தைகளாக வடித்தவுடன் ஒரு ஆத்ம திருப்த்தி என்னுள் ஏற்படுவதை  நிறைய சந்தர்பங்களில் உணர்ந்திருக்கிறேன். அப்படி நான் உணர்ந்த தருனங்கள் தான் இக்கடிதங்கள். இன்று எதேச்சையாக இவைகளை பார்த்தவுடன் வாழ்கையின் நிதர்சணங்களுக்கும் ஒரு அழகு இருப்பதை பார்க்கமுடிகிறது. 

    ஒய்வு நேரங்களில், பொழுது போகாத சமயங்களில் இவை உங்களுக்கு குறைந்த பட்ச சுவாரசியத்தை கொடுக்கும் என நம்புகிறேன். 



அன்புடன்
தா.அருள்

1 comment:

  1. Hi sir, i read your blogs for two days, it was amazing, I'm planning to conduct a magazine(ariviyal osain) for science exclusive in tamil, and looking for good hearted volunteer for contribution tamil, glas to seek your presence, contact me by. 9361372655, thank you

    ReplyDelete

அத்வைதம் கூறும் மூன்று அவஸ்தைகள்

  அத்வைத வேதாந்தம், மனித வாழ்க்கையையும், அதன் அனுபவங்களையும் ஆழமாகப் பார்க்கும் ஞானபாரம்பரியம். நாம் அனைவரும் தினமும் மூன்று நிலைகளில் (அவஸ...